ஆண் நண்பருடன் பேசிய மகள்.. ஆத்திரமடைந்த தந்தை ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம்..!

 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் அலிகார் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. தன் ஆண் நண்பரிடம் பேசி வந்துள்ளார். இதை அறிந்த தந்தை சிறுமியை கண்டித்துள்ளார். அந்த சிறுமிக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை சிறுமியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தனது நண்பர் ஒருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், மூவரும் குருகிராம் செல்லும் வழியில் யமுனை நதி மிதக்கும் பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, ​​தந்தை சிறுமியின் கழுத்தை துணியால் நெரித்துள்ளார்.

பின்னர் அவரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றில் மூழ்கிய சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஆற்றில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் நண்பர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ளனர், மேலும் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், சிறுமி தனக்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் கூறினார். பின்னர், சிறுமி பாதுகாப்பாக காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க