7 வயது சிறுமி கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலி... மழையில் விளையாடிய போது பெரும் சோகம்!  

 


கேரளாவில் திருச்சூர் மாவட்டம்  மாம்பழப் பகுதியில் வசித்து வருபவர்  ரமேஷ் கார்த்திகேயன். இவருடைய  மகள் 7வயது தேவிபத்ரா. தேவிபத்ரா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மகேஷ் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் பகவதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

அந்தசமயத்தில் விடாத மழை பெய்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த தேவிபத்ரா தனது சகோதரர் காசிநாதர் மற்றும் அனுஸ்ரீ ஆகியோருடன் மழையில் நனைந்தபடியே விளையாடிக் கொண்டிருந்தார்.திடீரென கோவில் சுற்றுச்சுவர் இடிந்து சகோதரர்கள் மற்றும் தேவிபத்ரா மீதும் விழுந்தது.

அவர்கள் அலறித்துடித்த  சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். சின்னஞ்சிறுவர் மூவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 சிறுவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிறுமி தேவிபத்ரா உயிரிழந்தார். மற்ற இரண்டு சிறுவர்களும் தீவிர சிகிச்சை  பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!