10 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... நீரில் மூழ்கி பலியான பரிதாபம்!

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நபருக்கு திருமணமாகி 10 வயதில் யாழிசை என்ற பெண் குழந்தை உள்ளது. சிறுமி அப்பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி தனது பாட்டியுடன் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.  அப்போது அந்த கால்வாயில் சிறுமி தண்ணீரில் குளித்துக்  கொண்டிருந்தன.

இந்த நிலையில், சிறுமி எதிர்பாரத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பாட்டி அவரை காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், யாழிசை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார், உடனடியாக விக்ரமங்கலம் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் யாழிசையின் உடலை நீண்ட நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்டனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விக்கிரமங்கலம் சார்பதிவாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்