அதிர்ச்சி! ஆற்றில் குளித்த 3 இளம்பெண்கள் நீரில் மூழ்கி பலி! சோகமான கல்யாண வீடு!

 

திருமண விருந்து முடித்து வீட்டு,உறவினர்களுடன் மொத்தம் 16 பேராக சேர்ந்து குளிக்க சென்ற இடத்தில், பள்ளி மாணவி உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தது, திருமண வீட்டை சோகத்தில் ஆழ்த்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜியா உல்ஹக்(45). இவர் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியர்க்கு விருந்து அளிப்பதற்காக தனது வீட்டிற்கு தம்பதிகளை அழைத்துள்ளார். 

இதையடுத்து புதுமண தம்பதி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் தக்கோலத்திற்கு நேற்று வந்தனர். மதியம் விருந்து முடிந்ததும் மாலையில் தக்கோலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கொண்டம் என்ற பகுதிக்கு 16 பேர் குளிக்க சென்றுள்ளனர். அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் குளித்துக் கொண்டு இருந்தனர். 

அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற 6 பேர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்து அவர்களுடன் குளித்து கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவி மற்றும் 2 பெண்கள் மயங்கிய நிலையில் இருந்தனர்.

உடனடியாக அவர்களை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்த தக்கோலம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில், பலியானது தலைமை காவலர் ஜியா உல்ஹக்கின் மகள் 9ம் வகுப்பு படித்து வந்த பவுசியா (13), அவரது அண்ணன் மகள்கள் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசூல் (24), ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பரிதாபானு (21) என்பது தெரிய வந்தது. இதில் ரசூல் திருமணமானவர். பரிதா பானு திருமணம் ஆகாதவர். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!