குடை எடுத்திட்டு போங்க... 12 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

 

தமிழகத்தில் நடப்பாண்டில் தாமதமாக தொடங்கிய  வடகிழக்கு பருவமழை  காரணமாக   பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை  மழை  கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு வரை  குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.


 
அதே போல வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன்  தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்டோபர் 31) மற்றும் நாளை (நவம்பர் 1)  ஒரு சில இடங்களில் மழை  பெய்யக்கூடும்.

 

மேலும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில்  தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை உட்பட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  நவம்பர் 3ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!