அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை!!

 

வங்க கடலில்   காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன்படி  அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில்   அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் தேஜ் புயல் வட மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு- தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடற்பரப்பில் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்   என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது நாளை அல்லது மறுநாள் புயலாக வலுவடையக் கூடும் என தெரிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!