30 வயது பெண்ணுடன் லிவிங்க் டூ கெதரில் 60 வயது தந்தை.. ஆத்திரத்தில் இரட்டைக் கொலை செய்த மகன்கள்..!

 
30 வயது இளம்பெண்ணுடன் லிவிங்க் டூ கெதரில் இருந்த 60 வயது தந்தையை மகன்கள் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அம்ரௌதா நகரைச் சேர்ந்தவர் விமல் திரிவேதி(63). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது தந்தை ராம்பிரகாஷ்(83) இவரது வீட்டில் குஷ்பு(30) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அப்போது விமலுக்கும், குஷ்புவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் லிவ் இன் பார்ட்னராக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரையும் மர்மநபர்கள் நேற்று இரவு கத்தியால் குத்தினர். இதைத் தடுக்க வந்த ராம்பிரகாஷையும் அந்த கும்பல் கத்தியால் குத்தியது.இதில் குஷ்பு மற்றும் ராம் பிரகாஷ் சம்பவ இடத்ததிலேயே உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் கடந்த விமல் திரிவேதி சிகிச்சைக்காக பான்பூரில் உள்ள ஹாலெட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது விமல் திரிவேதியின் மூத்த மகன் லலித்(42) மற்றும் 18 வயது மகன் ஆகியோர் லிவ் இன் பார்ட்னர் குஷ்புவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த இரட்டைக் கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.