நீர்வீழ்ச்சியில் மூழ்கி 5 பேர் பலி... பகீர் வீடியோ!

 
 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் லோனாவாலா பகுதியில் பூஷி அணை உள்ளது.  இயற்கை சூழல் நிறைந்த இந்த அணையை சுற்றுலாவாசிகள் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.  இந்த பகுதிக்கு ஒரே குடும்ப உறுப்பினர்களான பெண் ஒருவர், 4 சிறுவர் சிறுமிகள் என 5 பேர் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள், ஹடாப்சார் பகுதியை சேர்ந்த அன்சாரி குடும்ப உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.  நீர்வீழ்ச்சியை அணைக்கு அருகே சென்று பார்க்க அவர்கள் விரும்பியுள்ளனர். இதில், ஷாயிஸ்டா அன்சாரி (36), அமீமா அன்சாரி (13) மற்றும் உமேரா அன்சாரி (8) ஆகிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  அட்னான் அன்சாரி (4) மற்றும் மரியா சையது (9) ஆகிய 2 பேரை காணவில்லை.

இந்நிலையில், இரவான நிலையில் மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.  இன்று காலை மீட்பு பணி மீண்டும் நடைபெறும் என லோனாவாலா காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!