மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை, ரூ10 லட்சம் இழப்பீடு ... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
2001ல் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக வி.கே.சக்சேனா நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது டெல்லி துணைநிலை ஆளுநராக பதவி வகித்துவருகிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என மே 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து மேதா பட்கருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அதிக தண்டனை விதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேதா பட்கர் – வி.கே.சக்சேனா இடையே 2000 முதல் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கரும் வழக்குகளை தொடர்ந்தார். வி.கே.சக்சேனா அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நேஷனல் கவுன்சில் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்பின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!