”என்னை விட்டு போக கூடாது”.. 3 வது மனைவி ஹவுஸ் அரெஸ்ட்.. 12 வருடமாக சித்ரவதை செய்த சைக்கோ கணவன்.!

 

கர்நாடகா மாநிலம், மைசூர் அருகே உள்ள கோட் தாலுகா மடகேர் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னையா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுமா என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தன் மனைவி தன்னை விட்டு ஓடிவிடுவாளோ என்ற பயத்தில் சன்னையா இருந்துள்ளார். 

இதனால் கடந்த சில வாரங்களாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சன்னையா வேலைக்கு செல்வதற்கு முன்பு சுமாவை வீட்டில் உள்ள ஒரு அறையில் பூட்டி விட்டு சென்றுள்ளார்.மேலும், மாலையில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பினாலும், சன்னையா வருவதற்காக வெளியில் காத்திருப்பார்கள். சுமா அவர்களுக்கு ஜன்னல் வழியாக உணவு கொடுப்பார்.

இந்நிலையில், சுமாவின் பரிதாப நிலை குறித்து அறிந்த சந்த்வானா கேந்திரா போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று சுமாவை மீட்டனர். அதன்பிறகு, கணவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என்றும், பெற்றோர் வீட்டுக்குச் செல்வதாகவும் சுமா கூறினார்.இதையடுத்து சுமாவை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதே சமயம் சன்னையாவை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். 

3வது மனைவி தன்னை விட்டு ஓடிவிடுவாளோ என்ற அச்சத்தில் கணவனை வாரக்கணக்கில் வீட்டுக்காவலில் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க