பகீர்... 2 மனைவிகள் புகைப்படத்துடன் கணவருக்கு 3வது திருமணம்! 

 
  

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடபயலு கிராமத்தில் வசித்து வருபவர்  பாண்டண்ணா. இவரின் மனைவி  ல் பர்வதம்மாவை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் முதல் மனைவியே உடன் இருந்து அப்பலம்மாவை 2வது  திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 2007ல் ஆண் குழந்தை பிறந்தது. 
இந்நிலையில்   கணவர் பாண்டண்ணா 2 வது குழந்தை கேட்டதால் மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து 3 வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து  அதே ஊரில் வசித்து வரும்  லாவ்யா என்ற இளம் பெண்ணை 3 வது திருமணம் செய்து வைத்தனர். 2 மனைவிகள் புகைப்படத்துடன் 3 வது திருமணத்திற்கு கணவர் திருமணத்துக்கு  பத்திரிக்கை அடித்தனர்.  இந்த  பத்திரிக்கை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!