குளிக்க சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்... சிறுவன் உட்பட 3 பேர் பலியான சோகம்!

 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை, வடக்கு கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக மினி என்கிற சிந்து, அவரது மகள் அதிரா மற்றும் அவர்களது உறவினரான 13 வயது சிறுவன் அத்வைத் ஆகியோர் சென்றனர்.

அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​திடீரென சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். இதையடுத்து சிறுவனை காப்பாற்ற முயன்ற சென்ற மற்ற இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்



இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின் ஆற்றில் மூழ்கிய மூவரையும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!