தமிழக மீனவர்கள் 13 பேர் கைது... இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

 
 


தமிழக மீனவர்களை அடிக்கடி  இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.  அந்த வகையில் தற்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து  மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின்  விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


 புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.தற்போது  கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களையும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!