“அய்யா... ஸ்கேன் பண்ணுங்க சாமி...” ஒளிர்கிறது டிஜிட்டல் இந்தியா... க்யூ ஆர் கோடு மூலம் யாசகம் கேட்கும் மாற்றுதிறனாளி!

 

டிஜிட்டல் இந்தியா நிஜமாகவே ஒளிர்கிறது. பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது டிஜிட்டல் இந்தியா. பிளாட்பார்ம் கடைகள் தொடங்கி கோவில்களில் இ உண்டியல், ஷாப்பிங் மால்கள் வரை அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்தியா வளர்ந்து வருகிறது என மார்தட்டுகின்றனர் அரசியல்வாதிகள் .  ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களும் இப்போதெல்லாம் டிஜிட்டல் முறையில் தான் . அசாமின் கவுஹாத்தியில் பார்வையற்ற பிச்சைக்காரர் டிஜிட்டல் முறையில் க்யூஆர்கோடு வைத்துள்ளார்.


"தொழில்நுட்பம் உண்மையில் எல்லையே இல்லாதது. சமூக-பொருளாதார நிலையிலும் கூட, தடைகளைத் தாண்டிச் செல்லும் தொழில்நுட்பத்தின் சக்திக்கு இது ஒரு சான்றாகும்" என ஆளும்கட்சியை சாடியுள்ளார்.  ஏற்கனவே இதே போல், பீகாரின் பெட்டியா ரயில் நிலையத்தில் 40 வயதான ராஜு படேல் என்ற பிச்சைக்காரர் தனது கழுத்தில் QR குறியீடு கொண்ட போர்டு ஒன்றை மாட்டிக்கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்டதும்  சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து அந்த டிஜிட்டல் பிச்சைக்காரர்  பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியைக் கேட்க மறப்பதில்லை எனவும்   டிஜிட்டல் பிச்சைக்காரர் ராஜு படேல் கூறியுள்ளார்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்