ரூ.400 கோடி வேணும்... அம்பானிக்கு  கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் கைது!

 

ஆசை அளவறியாது என்பார்கள்... ரூ.20 கோடி கேட்டு பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் எழுதி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். இது குறித்து உடனடியாக அலர்ட் செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர். அடுத்த நாளே... எங்கள் மிரட்டலைக் கண்டுக்கொள்ளாததால் ரூ.200 கோடி வேண்டும் என்று  மீண்டும் மிரட்டல் கடிதம் வந்தது.  கடந்த அக்டோபர் 31ம் தேதி  முகேஷ் அம்பானியிடம் ரூ.400 கோடி பணம் கேட்டு மூன்றாவது முறையாக அடையாளம் தெரியாத நபரிடமிருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இந்த மூன்று மின்னஞ்சல்களும் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளதைப் போலீசார் அறிந்தனர். 

அக்டோபர் 27ம் தேதி முதல் முறையாக முகேஷ் அம்பானிக்கு, ரூ.20 கோடி தர மறுத்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் வந்தது. அடுத்ததாக, அக்டோபர் 28ம் தேதி 2வது இமெயிலில் ரூ.200 கோடி கேட்டு கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தொகையை அதிகப்படுத்தி ரூ.400 கோடி கேட்டு 3வது கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று இமெயில்களும் ஷதாப் கான் என்ற ஒரே ஐடியிலிருந்து வந்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயதான கணேஷ் ரமேஷ் வன்பார்தி என்ற இளைஞர் தான், முகேஷ் அம்பானிக்கு பலமுறை ஷதாப் கான் பெயரில் பலமுறை கொலைமிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து, அந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நவம்பர் 8 ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கூறிய போலீசார், “குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை நாங்கள் விசாரித்து வருகிறோம். அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய மின்னஞ்சல்கள் மற்றும் நெட்வொர்க் பற்றிய விவரங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!