அட கடவுளே... முதலிரவில் ஆசையாய் காத்திருந்த மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்!

 

திருமணம் முடிந்து, முதலிரவில் ஆசையாசையாய் தன்னுடைய மனைவியை எதிர்பார்த்து காத்திருந்த மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் கல்யாண பெண். ஆசை மனைவி வருவாள் என்று பாலுக்காக ஏங்கி காத்திருந்தது தான் மிச்சம். கடைசி வரை தாலி கட்டிக் கொண்ட மனைவி முதலிரவு அறைக்குள் வராததால் விசாரணையில் இருக்கிற மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காரணம் தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் வசிப்பவர் பாதல். இவருக்கும் நிக்கி என்ற பெண்ணுக்கும் கடந்த மார்ச் 1ம் தேதி விமர்சையாக திருமணம் நடந்தது. இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் அனைத்து சடங்குகளும் முழுமையாக முடிக்கப்பட்டது. இதையடுத்து முதல் இரவு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில். மணமகன் பாதல் முதல் இரவுக்கு அறையில் தயாராக இருந்துள்ளார். மணப்பெண் அறைக்குள் வருவதற்காகக் காத்திருந்தபோது, அவர்  வெகுநேர்மாக வரவில்லை. இதையடுத்து, மணப்பெண்ணை தேடி வீட்டை சோதனையிட்டபோது, பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் அதிகாரிகள் தலைமறைவான பெண்ணை கைது செய்தனர். தற்போது, அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் திருமணம் செய்து கொண்டு நகை, பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!