ஏர் இந்தியா குளறுபடிகள்... ரூ.80 லட்சம் அபராதம் விதித்து விமான இயக்குனரகம் உத்தரவு!

 

இந்தியாவிலேயே மிகப் பழைமையான விமான நிருவனம் என்றால் அது ஏர் இந்தியா தான். இது பலதரப்பட்ட மக்களின் பயணத்திற்கு உதவிகரமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது, ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல், விமானிகளுக்கு முறையான வார விடுமுறை வழங்காதது, அடிக்கடி பணி நேரத்தை நீட்டிப்பது, நீண்ட விமானங்களுக்குப் பிறகு விமானிகளுக்கு போதிய ஓய்வு அளிக்காதது போன்ற விதிமீறல்களில்  ஏர் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் ஏர் இந்தியாவின் விளக்கம் திருப்திகரமாக இல்லாததால், விமான போக்குவரத்து இயக்குனரகம் அந்த நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்